Tuesday, 2 July 2013

உதயாவும் அத்தை பெண்ணும்

        
        வாசலில் கால் வைக்கும் போதே உதயாவுக்கு புரிந்து விட்டது , வீட்டில் அத்தையும் மாமாவும் இல்லை என்பது . அழகிய அத்தை பெண் சாரா மட்டும் தனியே உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். விடுமுறை நாள் என்பதால் கை இல்லாத டாப்சும், முழங்கால் தொடாத குட்டி மிடியும் அணிந்து லூஸ் ஹேரோடு ஹாயாக இருந்தாள். திடிரென உதயாவுக்கு அந்த எண்ணம் தோன்றியது. சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து சாராவை பின்புறமாக மெல்ல நெருங்கி கண்களை பொத்தி அலேக்காக தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் . அவன் கை பட்ட உடனே அது உதய்தான் என்று புரிந்து கொண்ட சாரா எதிர்ப்பு தெரிவிக்காமல் ' இன்றைக்கு புதிதாக என்ன செய்ய போகிறான்' என்ற ஆவலோடு காத்திருந்தாள். அவளை பூப்போல படுக்கையில் கிடத்தியவன் , ஒரு பெரிய போர்வை எடுத்து இருவரையும் போர்த்தி கொண்டான் . சில வினாடி நிசப்தத்துக்கு பிறகு மெல்ல தன இடது கையை தூக்கி காட்டி சாராவிடம் சொன்னான் ' இதுதான் எங்க அப்பா எனக்கு வாங்கி குடுத்த ரேடியம் வாட்ச் , இருட்டுல கூட எவ்ளோ பளிச்சுன்னு தெரியுது பாரு . நாளைக்கு schoolukku போகும் பொது நீயம் உங்க மம்மி கிட்ட கேளு. என்ன..... :P


                                      

No comments:

Post a Comment