Tuesday, 23 July 2013

காதலி

இப்படி ஒரு காதலி கிடைத்தால்
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1)   உங்களை சந்திக்க நீண்ட தூரம்
பயணம் செய்து கால் வலிக்க அவள்
காத்திருப்பாள்.

2)   அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்
உங்களுடன் சமாதானம் ஆக
அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3)   உங்கள் வார்த்தை தரும் வலியில்
கண்ணீர் வடிந்தாலும்
அடுத்தகனமே புன்னகையில்
அதை மறைத்திடுவாள் .

4)   நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தா
அதை பொருட்படுத்தாமல் உங்கள்
மீது கொண்டநேசம் மட்டும் குறையாமல்
பார்த்துக்கொள்வாள்.

5)   இருவரும் விவாதிக்கும் விடயத்தில்
அவள் சொல்லும் கருத்து சரியாக
இருக்கும் போதிலும்
விவாதத்தை தொடராமல்
முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள்
உறவு முறிந்து போகாமல் இருக்க.
6)சிறு சிறு குறும்புகள்
செய்தேனும்உங்கள ை சிரிக்க வைக்க
முயற்சிப்பாள்.நீங்கள்
அவளுக்கு எத்தனை முக்கியமானவர்
என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)  நீங்கள் சந்தோசமாக இருக்கும்
தருணத்தில் அவள் கவலையாக
இருந்தால் ,அதைப் பகிர்ந்து உங்கள்
சந்தோசம் கெட்டு விடக்
கூடாதென்று கவலைகளைக் கண்ணில்
மறைப்பாள்.

8)  உங்களின் ஒரு சில
முரட்டு குணங்கள்
அவளை பாதித்தாலும்
உங்களை விட்டு விலகும் எண்ணம்
இல்லாதவளாய் இருப்பாள்.
9)  உங்கள் குடும்பத்திலும் நண்பர்
வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும்
நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)  நீங்கள் தொலைப் பேசியில்
அழைக்காவிட்டாலு ம் அவள்
அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும்,
அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும்
உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்
கொள்வாள்.



Thursday, 4 July 2013

சிறுசிறு அர்த்தமற்ற பேச்சுகள்


சிறுசிறு அர்த்தமற்ற பேச்சுகள் 
தான் ....
உறவுகளில் பாலமாம் ..!!!!
ஆனால் இங்கோ ...
பல உறவுகளில்
மௌனமே விரும்பி ...
ஏற்கப்பட்ட சிலுவைகளாக
உள்ளது ..!!! 


                                        

Tuesday, 2 July 2013

உதயாவும் அத்தை பெண்ணும்

        
        வாசலில் கால் வைக்கும் போதே உதயாவுக்கு புரிந்து விட்டது , வீட்டில் அத்தையும் மாமாவும் இல்லை என்பது . அழகிய அத்தை பெண் சாரா மட்டும் தனியே உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். விடுமுறை நாள் என்பதால் கை இல்லாத டாப்சும், முழங்கால் தொடாத குட்டி மிடியும் அணிந்து லூஸ் ஹேரோடு ஹாயாக இருந்தாள். திடிரென உதயாவுக்கு அந்த எண்ணம் தோன்றியது. சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து சாராவை பின்புறமாக மெல்ல நெருங்கி கண்களை பொத்தி அலேக்காக தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் . அவன் கை பட்ட உடனே அது உதய்தான் என்று புரிந்து கொண்ட சாரா எதிர்ப்பு தெரிவிக்காமல் ' இன்றைக்கு புதிதாக என்ன செய்ய போகிறான்' என்ற ஆவலோடு காத்திருந்தாள். அவளை பூப்போல படுக்கையில் கிடத்தியவன் , ஒரு பெரிய போர்வை எடுத்து இருவரையும் போர்த்தி கொண்டான் . சில வினாடி நிசப்தத்துக்கு பிறகு மெல்ல தன இடது கையை தூக்கி காட்டி சாராவிடம் சொன்னான் ' இதுதான் எங்க அப்பா எனக்கு வாங்கி குடுத்த ரேடியம் வாட்ச் , இருட்டுல கூட எவ்ளோ பளிச்சுன்னு தெரியுது பாரு . நாளைக்கு schoolukku போகும் பொது நீயம் உங்க மம்மி கிட்ட கேளு. என்ன..... :P